நகுலா சிவநாதன்

தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி

நாடும் நசுக்கும் நம் மக்கள் கூட்டம்
தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி
மூடும் கதவுகளும் முனைப்பாய் இறுக்க
ஆடும் ஆட்டங்களும் அரசியல் சதுரங்கமே!

தேங்கிய வலிகள் தேசத்தை நோக்க
தாங்கும் விழிகள் வரவை எதிர்பார்க்க
துாங்கா இரவுகள் துரத்தும் வேளை
நீங்கா வாழ்வாய் நித்தம் போராட்டம்

தேடும் விழிகளில் தேனாய் ஆறு
கூடும் கூட்டங்களும் அவன் வருவானா?
பாடும் குருவிகளும் அவளைக் கண்டாயா?
பறக்கும் மனமோ இயந்திர வேகமாய்!
அவன் வருவானா??

நகுலா சிவநாதன்1688

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading