இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நகுலா சிவநாதன்

நல்லூரின் கந்தனவன்

நல்லூரின் கந்தனவன் நயமாக வருகின்றான்
அல்லல்கள் தீர்க்கின்ற அருந்தமிழின் முருகனிவன்

பல்லோர்கள் வேண்டுதலில் பற்றான கந்தனிவன்
பல்கோடி மக்களின் துன்பங்கள் துடைப்பவன்
எல்லோரும் ஏத்தி வழிபடும் கந்தன்
எம் இதயம் என்றும் இவன்தாள் பணியும்

தாய்நிலத்து உறவுகளின் வரமான கந்தனிவன்
தக்கதுணை தந்து நின்று
தரமாகக் காப்பவன்
எப்போதும் நினைக்கின்ற முருகாநீ
என்றென்றும் அருளிடுவாய் கந்தா உன் கருணையால்

தேரெறி வருகின்றாய் தேசமதில் காண்கின்றோம்
ஊரோடு மக்களை உளமார காப்பாற்று

நகுலா சிவநாதன் 1731

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading