இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நகுலா சிவநாதன்

கம்பன்விழா

கன்னித் தமிழ் உரைத்த கம்பன்விழா
கனிவாய் மனத்தில் பதிந்த விழா
அன்னைத் தமிழின் அமுத விழா
ஆனந்தம் தந்த அற்புத விழா

கவியரங்கு கண்ட பெருவிழா
புவியதனில் புடம்போட்ட நன்விழா
விருத்தங்கள் எழுத வைத்த அரங்கிலே
விந்தை ஆயிரம் விருத்தமான பெருமகிழ்வு

முத்தாய் முகிழ்த்த விழாவிலே
முனைப்பாய்ப் பாராட்டிய பாட்டரசர்
சொத்தாய் தொடுத்த ஆயிரம் விருத்தம்
சிறப்பாய் பாவலர்மணி பெற்றிட வைத்ததே

தமிழுக்கு மணிமகுடம் தந்த விழா
அணியாக மக்களும் திரண்டவேளை
மணியாகப் பட்டமும் மலர்ந்திட்டே
மங்களமாய் வாழ்த்துகளும் மனதை நிறைத்ததே!

படைப்புக்கொரு பெருமை கிடைத்தது
பாரில் மகிழ்வு துளிர்த்தது
மடை திறந்த வெள்ளமாய் விருத்தம்
தடையேதுமின்றி விரியட்டும் புதுப்பரப்பு

நகுலா சிவநாதன்1733

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading