இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நகுலா சிவநாதன்

பள்ளிக்காலம்

இனிக்கும் பருவம் இதயத்தில் அது
இன்பம் தந்த இளமைப் பருவம்
துன்பம் அகன்று துயரம் மறந்து
அன்பே துளிர்க்கும் அருமைப் பருவம்

பள்ளிக்காலம் துள்ளி நினைவுகள்
தூரச் சென்றிடும் மகிழ்வான காலம்
வெள்ளியலையாய் வெண்சிட்டுக்களாய்
அள்ளி அணைத்து மகிழ்ந்த பருவம்
அகன்றே விட்டதே! எமைவிட்டு
நினைத்தாலே இனிக்கும் பருவம்
நிம்மதி தந்த வசந்தகாலம்

நகுலா சிவநாதன் 1736

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading