நலமெனும் செல்வம்

ஜெயம்

கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல் மெதுவாக வரும்
விருந்தினராய் உடலின் வாசலைத் தட்டும்

அமைதியான எதிரியாய் பாங்காக வந்து
சீவன் தங்குமிடத்தின் அமைதியை குலைக்கும்
சிரித்த முகம் சோர்ந்து போகும்
வலி வாய்திறந்து வலிமையுடன் பேசும்

செல்வத்தை விட நலம்தான் பெரிதென
பணம் குவித்த வாழ்க்கையும் உணரும்
அன்பான கரங்களின் அரவணைப்பே தேவைப்படும்
ஆறுதலான வார்த்தைகள் வருத்தத்திற்கு மருந்தாகும்

அவசரம் இப்போதுதான் அமைதியாக மாறும்
சின்னசின்ன மகிழ்சிகளின் மதிப்பும் தெரியும்

18-03-2026

Author:

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading