நான்யாரு (730)

நான்யாரு செல்வி நித்தியானந்தன்
புதருக்கு வெளியே உம் பிறப்பு
புயல்மழையில் குடை விரிப்பு
பூ காய் இலை இல்லா தரிப்பு
பூஞ்சை தாவரமாய் இதன் சிறப்பு
ஆசியாவிலே அதிக வகை வளர்ப்பு
ஆரோக்கியம் கொண்டதாய் இதனிருப்பு
ஆயிரத்திற்க்கு மேலே இனச் சேர்ப்பு
அரிய வகை நோய்களுக்கு உயிர்ப்பு
புற்றுநோய், இரத்தசோகை நோய் எதிர்ப்பு
புரதம் மற்றும் எண்வகை சத்து இருப்பு
புலால் உணவுக்கு மாற்றான விருப்பு
புவியிலே மெல்லிய இழைகளின் உருவகிப்பு
ஜரோப்பா உணவில் பலவகை மதிப்பு
ஜயுரவாய் சிலரடை தட்டியும் கழிப்பு
ஐப்பான் சீனாவிலும் உண்ணல் அதிகரிப்பு
ஐந்துவகையே ஆரோக்கிய வாழ்வுக்கு சிறப்பே

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading