10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
நூற்றாண்டுவிழாக் கண்ட மாதரசி
ரஜனி அன்ரன்
“ நூற்றாண்டுவிழாக் கண்ட மாதரசி “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 16.01.2025
நெற்றியில் திருநீறு நேர் கொண்ட பார்வை
கணீரென்ற குரல் கம்பீரமான பேச்சு
கருணை கொண்ட தாயுள்ளம்
இத்தனைக்கும் சொந்தக்காரி
எங்கள் சிவத்தமிழ்ச் செல்வி
தைத்திங்கள் ஏழினில்
நூற்றாண்டு விழாக் கண்டாரே !
அன்னையர்களுக்கெல்லாம் அன்னை
ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்புத்தாய்
ஆன்மீக சொற்பொழிவின் வித்தகி
ஆலயத்தின் அறங்காவலர்
ஆன்மீகப் பாதையின் வழிகாட்டி
அன்னை சிவத்தமிழ்ச் செல்விக்கு
அன்னபூரணி மண்டபத்தில்
ஆறுதிருமுருகன் தலைமையில்
அழகாய் அரங்கேறியதே நூற்றாண்டுவிழா !
தமிழுக்கு கிடைத்த தனிப்பெரும் சொத்து
மாதர் குலத்தின் மணிமகுடம்
மதங்கள் கடந்த மானிட நேசிப்பின் தாய்
சக்தியிலும் பக்தியிலும் மிஞ்சிய பக்தை
ஆசிரியப்பணி அருந்தமிழ்ப்பணி அறப்பணியென
அன்னையின் பணிகளோ அளப்பெரியதே

Author: Nada Mohan
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...
16
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025
அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்
ஆடம்பரத்திற்காய்...