நூற்றாண்டுவிழாக் கண்ட மாதரசி

ரஜனி அன்ரன்

“ நூற்றாண்டுவிழாக் கண்ட மாதரசி “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 16.01.2025

நெற்றியில் திருநீறு நேர் கொண்ட பார்வை
கணீரென்ற குரல் கம்பீரமான பேச்சு
கருணை கொண்ட தாயுள்ளம்
இத்தனைக்கும் சொந்தக்காரி
எங்கள் சிவத்தமிழ்ச் செல்வி
தைத்திங்கள் ஏழினில்
நூற்றாண்டு விழாக் கண்டாரே !

அன்னையர்களுக்கெல்லாம் அன்னை
ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்புத்தாய்
ஆன்மீக சொற்பொழிவின் வித்தகி
ஆலயத்தின் அறங்காவலர்
ஆன்மீகப் பாதையின் வழிகாட்டி
அன்னை சிவத்தமிழ்ச் செல்விக்கு
அன்னபூரணி மண்டபத்தில்
ஆறுதிருமுருகன் தலைமையில்
அழகாய் அரங்கேறியதே நூற்றாண்டுவிழா !

தமிழுக்கு கிடைத்த தனிப்பெரும் சொத்து
மாதர் குலத்தின் மணிமகுடம்
மதங்கள் கடந்த மானிட நேசிப்பின் தாய்
சக்தியிலும் பக்தியிலும் மிஞ்சிய பக்தை
ஆசிரியப்பணி அருந்தமிழ்ப்பணி அறப்பணியென
அன்னையின் பணிகளோ அளப்பெரியதே

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

Continue reading