இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நேவிஸ் பிலிப்.

கவி இல(97) 06/04/23
அநீதித் தீர்ப்பு

குவலயத்தின் பெரும் பரப்பில்
கண்டனங்கள் ஏராளம்
சுரந்து வரும் கொடுமைகளும்
கோபங்களும் தாராளம்

பெண்கள் குழந்தைகள்
நோயாளர் முதியோரும்
நிம்மதி இழந்தோராய்
முடங்கிக் கிடக்கின்றனர்

மானிடநேய அன்பை
இதயத்தில் சுமந்தவராய்
காருண்ய பண்புகளை
பார்மீது படர விட

நேர்மை நியாயங்கள்
வேரூன்றிப் படர்ந்திடவே
நாவினிக்கும் வார்த்தைகளாய்
போதனைகள் பகர்ந்தாரே

நியாயங்கள் நேர்மைகள்
வரண்டு போன கொடுங் கோலர்
வக்கிர வன்முறையை மூல தனமாக்கி
அநீதித் தீர்ப்பெழுதி நல்லாயனை
சிலுவையில் அறைந்து கொன்றாரே
நன்றி வணக்கம் ..

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading