இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(105) 8/06/23
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே
**********************************
பொதிகை மலைத் தென்றலிலே
பூத்தெழுந்த தமிழே
‘அ’ எழுத்தை வித்தாக்கி
தொகுத்தெடுத்த எழுத்துக்கள்

செந்தமிழ் சொற்றொடராய்
பாரெங்கும் பரவி வரும் தமிழ் மொழி
புலம் பெயர் சிறார்களால்
ஒத்திசையாய் இணைந்திருந்தே

பாமுகத்தில் தொடர்ந்து வர
எட்டுத்திக்கும் தமிழ்மணம்
கொட்டும் முரசொலியாய்
புவியெங்கும் முழங்கிடுதே

ஊக்கமாய் ஆக்கங்கள்
தேக்கம் காணா பிரளயமாய்
ஊற்றெடுத்து பெருகிடவே
சுதந்திர தமிழ் மணமெங்கும் கமழ்ந்திடுதே

அழிவில்லை யென்றும்
தாய் மொழியாம் தமிழுக்கே
அடுத்த தலைமுறைக்கும்
வளர்த்து வரும் பாமுகம்
வாழ்க வாழ்க என்றும் வாழவே,,!!!!!!
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading