தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

வியாழன் கவிதை நேரம்!! கவிதை-2311 தண்ணீருக்காய்த் திரளும் போர் மேகங்கள்..!! ஆழக்கடலைக் கடக்கின்ற அத்தனை கப்பல்களும் அள்ளிக் கொணரும் நமக்காய் அத்தியாவசியப் பொருட்களை.. அந்தோ...

Continue reading

தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்

ராணி சம்பந்தர் மண்ணிற்கும் விண்ணுக்குமே மழை நீரில் ஏணிகட்டி குதூகல கொண்டாடத் தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள் தாகம் சுழலும்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்..

வசந்தா ஜெகதீசன் தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்... வரட்சி நிலைபோக்கிடுமே வளமது திரண்டிடுமே கார்மேகக் கறுக்கலிலே கனமழை பெய்திடுமே காரியத்தின் சித்திகளும் கைகூடும்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(83) 01/12/22
விடியலைத் தேடி

மனிதம் எங்கே மனித மாண்பு எங்கே.
மனிதனே மனிதனுக்கு எதிரியா
இறைவனின் திட்டம் இதுதானா?்

சிங்கார வனம் ஒன்று வேண்டும்
தேவனோடு நான் உரையாட வேண்டும்
மனிதம் அங்கே மலர வேண்டும்
அன்பு அதில் குடி கொள்ள வேண்டும்

நாகரீக வளர்ச்சி மேலோங்ஙிட
மானிட மாண்மை குன்றிவிட
விடியலைத் தேடுகின்றோம் கிடைக்கவில்லை

மரணத்தின் ஓலங்கள் ஓயவில்லை
இயற்கையின் சீற்றம் அடங்கவில்லை
பூமியின் கொந்தளிப்புக்கள் மாறவில்லை

பாலியல் வல்லுறவுகள் வித்திட
பாரிய நோய்கள் விருட்சமாக
குடும்ப உறவுகள் உதிரந்துவிட
நாகரீக கொலைகள் தாண்டவமாட

விண்மீன்கள் ஒளி வீச வேண்டும்
நாதம் ்காற்றில் இசை பாட வேண்டும்
இறைத்திட்டம் இங்கே நிறைவேற வேண்டும்
சந்தோசம் எங்கும் பிறக்க வேண்டும்

பூலோகம் ஒளி மயமாக வேண்டும்
பூலோகம் ஒளி மயமாக வேண்டும்
விண்ணகத் தேவன் மண்ணில் வர
காத்திருக்கும் நாங்கள் அன்போடு

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading