நேவிஸ் பிலிப்

கவி இல (110) 20/07/23
விடுமுறை வந்தாலே

விடுமுறை நாட்களை
எண்ணியபடி எப்போ வருமென
காத்திருந்த காலம் அன்றுற
வேலைப் பளு தொல்லையில்லை

விடுமுறையென்றாலே
சந்தோச ஆரவாரம் ,பிள்ளைகளும்
குதூகலமாய் துள்ளிக் குதிக்க
வீடே களை கட்டும்

உடுக்க படுக்கவென்றே
பொட்டலங்கள் கூடவே
கட்டுச்சோறுங் கட்டிக்கொண்டுஐ
வழிப்பயணத்திலே

கொறிக்க குடிக்கவென்றே
பலதையும் சேர்த்தெடுத்து
ஒரு ஊர்தியிலே
செல்வோம் பயணம்

மீண்டும் சென்றிடவே
மனமும் ஆவல் கொண்டிடுதே

நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading