20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
நேவிஸ் பிலிப்
கவி இல (113) 07/09/23
எழுத்தறிவில்லையெனில்
**********************
எழுத்தறிவில்லையெனில்
யாமிங்கே ஒன்றுமில்லை
‘அ ‘என்ற முதல் எழுத்தே
அம்மா என்றழைக்கும் பல மொழிக்கும்
மூல தனமாய் அதுவே
அன்பிற்கு ஆதாரமாகி
அறிவுக்கோர் பாடமாகி
மண்ணில் வாழ் மாந்தர்க்கு நற்,
பண்புதனை ஏராளமாய்
கற்றுத்தந்த எழுத்தறிவை நாம்
கண்ணின் மணியெனவே
போற்றிடல் வேண்டுமன்றோ
கற்பனையும் காவியமும்
கவிகளுடன் இலக்கியமும்
நற்றமிழால் அறிந்திடவே எமக்கு
எழுத்தறிவு வேண்டுமன்றோ
தனி மனித ஆளுமையும்
கூட்டணியின் ஒற்றுமையும்
இணைந்தேதான் இயங்கிடவே எமக்கு
எழுத்தறிவு வேண்டுமன்றோ
பாட்டறிந்தும் படிப்பறியா
ஏடறிந்தும் எழுத்தறியா
எத்தனையோ பாமரர்
இன்றும் இப்பாரினிலே
அறிவுக் கண் திறக்க
எழுத்தறிவை எடுத்தியம்ப
ஊக்குவிக்கு்ம் ஆசான்களைப்
போற்றிடுவோம் இந்நாளிலே
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...