12
Nov
ராணி சம்பந்தர்
புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள்...
12
Nov
முதல் ஒலியின் அரசன் பகுதி 2
-
By
- 0 comments
ஜெயம்
சொற்கள் மட்டும் இருந்தால் போதுமா
அதற்கு மெய்யான உயிர் தந்தவராம்
இன்று அந்தக்குரலுக்கு நம்...
12
Nov
முதல் ஒலியின் அரசன் பகுதி 1
-
By
- 0 comments
ஜெயம்
காற்றலையை தன் ஒலிகளால் வசப்படுத்தியவர்
மாயக்குரலால் பல மனங்களை கவர்ந்தவர்
சொற்களின்...
பண்டிகை என்றாலே
ஜெயம் தங்கராஜா
கவி 747
பண்டிகை என்றாலே
பண்டிகை என்றாலே இனம்புரியா குதூகலம்
பண்டிகை என்றாலே உற்சாகம் கூடுகட்டும்
பண்டிகை என்றாலே புத்தாடைகளின் புதுவரவு
பண்டிகையென்றாலே விதம்விதமான தின்பண்டங்களின் படையெடுப்பு
நம் கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்று
நம் பண்பாட்டுடன் ஒட்டியுறவாடிய ஒன்று
உறவுகளை நட்புதனை வளர்த்துவிட காரணமாயிது
வாழ்த்துதனை பரிமாறிக்கொள்வதற்கு அமைக்கும் வாய்பையிது
மகிழ்வை அடிபடையாகக்கொண்டு நடத்தப்படும் திருநாள்
பாரம்பரியத்தைக் காத்துநிற்கும் பரம்பரையின் பெருநாள்
முன்னோர்கள் கடைப்பிடித்த பழக்கங்களின் மேன்மையிது
தலைமுறையும் மதித்ததனை கொண்டாடத் தேவையது
கால சூழ்நிலை புதியவற்றை திணிக்கலாம்
காரணஞ்சொல்லி மாற்றக்கூடாததையும் மாற்ற முயற்சிக்கலாம்
வீண் செலவு ஆடம்பரம் எனக்கூறலாம்
பண்டிகைகளின் வேர்களறிந்தவர்கள் இரசிப்போடு கொண்டாடலாமே
ஜெயம்
30-10-2024
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...