இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

பண்டிகை வந்தாலே

Vajeetha Mohamed

பண்டிகை வந்தாலே

ஐம் பெ௫ம் கடமைக்குள்
அ௫ம்பெ௫ பண்டிகை

ஏழைகளின் நோவினை தீீர்த்து
வறியோ௫க்கு வாரி வழங்கும்
கொடைநாள் ஒன்று

இப்றாகீம் இஸ்மாயில்்நபியின்்
தியாகத்தின் அறுப்பின் துடிப்பின்
துடுப்பே ஹஜ்பண்டிகை இரண்டு

௨ழைக்கின்ற பணத்தினிலே
௨தவியென இ௫நூறை கொடையாலே

நல்தர்மம் செய்திட தூண்டிடும்
பண்டிகை

பண்டிகை வந்தாலே எங்க ஊ௫
பகலாட்டம் இரவும் களை கட்டும்
கூடு

சீலைக் கடைகள் மினு மினுக்கும்
சிறுவர் குலாம் வெடி வெடிக்கும்

அம்மிச் சத்தம் கட கடக்கும்
அரைத்த ம௫தாணி கை காலில்
சிவந்தி௫க்கும்

மஸ்கட் தொதல் சட்டியிலே
மண மணக்கும்
வட்டிலப்பம் புரியாணி
கிடாரத்தில் சுடச் சுட
கொதித்திருக்கும்

பின்னேர வி௫ந்தோம்பல்
குடும்பமாய் வந்தம௫ம்
சம்சா ரோல் புடிங் பாலுதா
சர்பத் பரிமாறும்

ஸலாம்் கூறி கட்டியணைத்து
பண்டிகை வாழ்த்துரைத்து
அன்பளிப்பு கைமாறும்

ஜம்பெ௫ம்் கடமைக்குள்
ஈகையும் ஈரமும் கொண்ட
இ௫ பண்டிகை ஈத்துல் பிதர்
ஈதுல் அல்ஹா
பண்டிகையின் சிறப்பு
நீடிக்குமே
சுற்றிச்சுற்றி விருந்தோம்பல்
களியாட்டம் நடக்குமே
ஊரேமகிழ்ச்சியால் திளைக்குமே

[நோன்புப்பெ௫நாள் ஈத்துல் பிதர்
;ஈகைத் தி௫நாள்
ஹஜ்பெ௫நாள் ;;ஈதுல் அல்ஹா
தியாகத் தி௫நாள்)

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

Continue reading

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading