பண்டிகை வந்தாலே 686

Selvi Nithianandan

பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே
பணமும் செலவாகும்
பற்பல கடைகளாலே
பசாரும் வழிந்தோடும்

ஆடைகள். விலைகள்
அதிரடி குறைப்பாகும்
ஜாடையாய் பழையதும்
தள்ளுடி விற்பனையாகும்

வாழ்த்து பலகாரம்
வாசலில் வரவேற்கும்
வாசனை திரவியமும
வாஞ்சையா மணக்கும்

மனிதமாய் இணைந்து
மகிழ்வாய் கொண்டாடி
புனிதமாய் அனுசரித்து
புவனத்தில் நிலைபெறவே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading