மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

பவானி மூர்த்தி

நினைத்தாலே இனிக்கும் பள்ளிப் பருவம்

பள்ளிப் பருவம்
நினைத்தால் இனிக்கும்/
பாச மழையில் அன்னை
இருப்பாள்/
துள்ளி ஒடி மகிழும்
பருவம்/
துன்பம் அறியாப் பள்ளிப்
பருவம்/
அள்ளி அணைத்தே அமுதும்
ஊட்டி/
அகிலம் தன்னை வெல்லச்
சொல்லி/
உள்ளம் எங்கும் உவகை
கொண்டே/
உலகை ஆளும் உணர்வின்
பருவம்/

நினைத்தால் இனிக்கும்
பள்ளிப் பருவம்/
நித்தம் இன்பம் தந்த
பருவம்/
எனையும் ஈர்த்த இனிமைக்
காலம்/
என்றும் இனிக்கும்
மகிழ்வின் காலம்/
புனையும் கவியில்
கன்னல் சுவையே/
புவியில் இன்பம்
இன்பம் தானே/
முனைந்த வாழ்வின்
முழுதும் இன்பம்/
முற்றும் முயற்சி
அழகின் பருவம்/

இன்பம் தந்த இனிய
பருவம்/
ஈட்டும் இணையும் இல்லாப்
பருவம்/
துன்பம் இல்லாத் தூய
பருவம்/
துடிக்கும் மனதில் தூது
செல்லும்/
வன்மம் இல்லா வளமைப்
பருவம்/
வாழ்வில் நினைக்க
இனிக்கும் பருவம்/
கன்னல் சுவையை
அளிக்கும் பருவம்/
காலம் போற்றும்
பள்ளிப் பருவம்/

மெல்ல மெல்ல மோகம்
கொள்ளும்/
மெதுவாய் நெஞ்சில்
நிலைக்கும் அழகாய்/
நல்ல பெண்ணாய்
பள்ளிச் சென்று/
நன்றாய் பாடம்
படித்த பருவம்/

வல்ல கல்வி வகையாய்
நாளும்/
வருத்தம் நீங்க கற்ற
பருவம்/
சொல்ல சொல்ல
இனிக்கும் பருவம்/
சொல்லில் அடங்காச்
சொக்கும் பருவம்/
சொல்லில் அடங்கா
சொக்கும் பருவம்/

இனிய வணக்கம் வாணி
அன்பான நன்றியுடனும் வாழ்த்துக்கள்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading