மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

பாலதேவகஜன்

விடியுமா தேசம்

விடியுமா! விடியுமா!
எம் தேசம் விடியுமா!
முடியுமா! முடியுமா!
எம் வேதனை முடியுமா!

தாய் மடியாய் தாங்கிய தேசம்
பேய் குடியாய் மாறிடலாமா
தேய் பிறையாய் எங்கள் தேசம்
தேய்ந்திட விட்டிடலாமா

கல்லெறி வாங்கும் காய் தரும் மரமாய்
செல்லெறி வாங்கிய எங்களின் தேசம்
காவல்களின்றி சிதைந்து விடாமல்
கல்லறை நாயகர் காத்தருள்வாரோ!

தியாகங்களால் நிறைந்த தேசம்
தீர்த்திடுமோ தன் தீரா தாகம்
வீரமாய் நின்ற விடுதலை மறவர்
வீரியம் வென்றே தீரும்.

சிதைந்துபோகும் இருப்பை கண்டு
ஒடித்துபோகும் எங்கள் வாழ்வு
விடிவு காண்பது எப்போ? நாங்கள்
விரும்பி வாழ்வதும் எப்போ?

வலிந்தவன் தரமறுக்கும் விடிவுக்காய்
வீறுகொண்டெளுந்த கரிகாலா!
விடிவு இன்றும் கிட்டவில்லை
உன் முடிவும் நாங்கள் எட்டவில்லை.

நீயிருந்த காலம் தந்த நிம்மதிகளை
மீட்டுப் பார்கி்கன்றேன்
மீளவும் கேட்கின்றேன்
உன் இருப்பே எமை காக்குமையா!

ஈழத்தாய் ஒர்நாள் இனிமைகாண்பாள்
அன்றே நாங்களும் இனிமையாவோம்
விடிவென்ற வெளிச்சத்தை நோக்கியே
எங்கள் பயணம் தொடரும்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading