மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

பாலதேவகஜன்

அந்த ஒற்றை ஆசானின்
உயர்வு குணங்களை
மீட்டுப் பார்க்கின்றேன்
மீளவும் கேட்கிறேன்.

இத்தனை ஒழுக்கமாய்
இன்று நான் இருப்பது
அந்த ஒற்றை ஆசானின்
காலத்தில் நான் கற்றதே.

அன்பால் நனைவதும்
அதட்டலால் மலைப்பதும்
அடியால் பதறுதலும்
அந்த ஒற்றை ஆசான் ஒருவருக்கே.

எதை எதையோ கற்றுத்தர
எத்தனையோ பாடு பட்டார்
விதம் விதமாய் கதைகள் சொல்லி
விரும்பியே படிக்க வைத்தார்.

அரும்பும் வயசில் அத்தனையும்
அகல்வின்றி பதிய வைத்தார்
அவர் பிள்ளயாய் எங்களையும்
அகத்தினிலே இருத்தி வைத்தார்.

அவர்போல வாத்தி யாரு?
அகிலத்தில் இனி பிறக்கமாட்டார்
அப்படியே பிறந்தாலும்
அவரை ஒருபோதும் மிஞ்சமாட்டார்.

இன்றய வாத்தியள்
படிப்பித்தலை தவிர
எதை எதையோ செய்து
பதை பதைக்கவும் வைக்கினம்.

விளங்கம் கேட்ட பிள்ளையை
விளக்கணைக்க கேக்குறாரு
விருப்பம் இல்லையென்றால்
வீடியோ காட்டி மிரட்டுராரு.

தன் பிள்ளை வயசென்று
தறுதலைக்கு தெரிஞ்சி்ருந்தும்
தப்பாதமான் பாக்குறாரு
தாகம் தீர்க்க துடிக்குறாரு.

உச்சமில்லா தண்டனைக்கால்
உச்சி உச்சி வருகிறாரு
ஒழுக்கமான வாத்தியரையும்
தலை குனிய வைக்குறாரு.

கரண்டு கம்ப தண்டனைகள்
வறண்டு போன காலமிது
முரட்டுத்தன வாத்தியர்கள்
முளைத்தெழும்பும் காலமுமிது.

நீங்கள் குருவாய் உயர்ந்தது
குற்றம் புரியவா?
மாற்றம் தேடும் உலகில்
நீங்களும் புனிதமாகுங்கள்.

அடுத்த சந்ததியின் இறமைகள்
உங்கள் திறமையில் என்பதை
நினைவில் கொண்டு நாங்கள்
கைகூப்பும் கடவுளராகுங்கள்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading