அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

பாலரவி

இன்றுதைப் பொங்கல். ஞாயிறு ஓய்வுநாள்.
காலையில் இருந்து சர்க்கரைப் பொங்கல் அதனொடு அவலும் ஆவலாய் உண்டு மதிய வேளையில் நாவெலாம் கசக்க
உறைப்பாய் காரமாய் எதனையும் உண்டால் இதமாய் இருக்கும் என்றுளம் நினைக்க
எந்தன் மனையாள்
முருங்கைக்
காயொடு உருளைக்கிழங்கை முறுகப் பொரித்து வெந்தயக் குழம்பினில் வெகுவாய் கலந்து வாசம் மேலிட குழம்பினை ஆக்கி போதாக்குறைக்கு தாளிதம் மேலிட இரசத்தையும் வைத்து சின்னதாய் வாழைக்
காயொடு உருளைக்கிழங்கை வகையாய்ப் பொரித்து அப்பளம் சேர்த்து தட்டில் வைத்தாள். இரண்டு தடவைகள் இதமாய் இறக்கி ஆகா சைவ உணவிலும் இத்தனை உருசியா என்றெனை இன்று வியந்திட வைத்தாள். கவிதையே வேண்டாம் என்றிருந்தென்னை இரண்டு கவிதைகள் இயற்றிய வைத்தாள். யாரோ பாடினான். ………….அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். சரியாப் போச்சு.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading