பாலரவி

இன்றுதைப் பொங்கல். ஞாயிறு ஓய்வுநாள்.
காலையில் இருந்து சர்க்கரைப் பொங்கல் அதனொடு அவலும் ஆவலாய் உண்டு மதிய வேளையில் நாவெலாம் கசக்க
உறைப்பாய் காரமாய் எதனையும் உண்டால் இதமாய் இருக்கும் என்றுளம் நினைக்க
எந்தன் மனையாள்
முருங்கைக்
காயொடு உருளைக்கிழங்கை முறுகப் பொரித்து வெந்தயக் குழம்பினில் வெகுவாய் கலந்து வாசம் மேலிட குழம்பினை ஆக்கி போதாக்குறைக்கு தாளிதம் மேலிட இரசத்தையும் வைத்து சின்னதாய் வாழைக்
காயொடு உருளைக்கிழங்கை வகையாய்ப் பொரித்து அப்பளம் சேர்த்து தட்டில் வைத்தாள். இரண்டு தடவைகள் இதமாய் இறக்கி ஆகா சைவ உணவிலும் இத்தனை உருசியா என்றெனை இன்று வியந்திட வைத்தாள். கவிதையே வேண்டாம் என்றிருந்தென்னை இரண்டு கவிதைகள் இயற்றிய வைத்தாள். யாரோ பாடினான். ………….அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். சரியாப் போச்சு.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading