மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

பால தேவகஜன்

உப்புக் கஞ்சி
பசி போக்க
அஞ்சி அஞ்சி
ஓடி வந்தோம்!
அத்தனையும்
இழந்து வந்தோம்!
மிஞ்சி இனி போவதற்கு
கொஞ்சமும் இடமில்லை.

சனம் பட்ட பாடுகள்
மனம் விட்டு விலகாது
தினம் நின்று கொல்ல
இனம் ஒன்றின்
கனத்த வரலாறு
இதை மிஞ்சி ஆகாது.

இனவெறியாட்டம்
இது கடத்துபோகா
எங்களி் வாட்டம்.
கொத்துக் குண்டுகள்
குதறிய உடலங்கள்
குத்துயிராய் கிடந்து
துடிதுடிக்க
காக்கும் கருணையிருந்தும்
கடந்து வந்துவிட்டோம்
தாமதித்தால் எம்
தலை சிதறும் என்ற
நிலையுணர்ந்து.

பேரம் பேசி நின்ற
எங்களுக்கான வீரங்கள்
சோரம் போகாது
கோரமாய் எழுந்தன
எதிரில் நின்றவை
எத்தனை நாடுகள்
அத்தனையும் மிஞ்சம்
அஞ்சியே போயின
ஆயினும் புரியாத புதிராய்
திடமோடு நின்றவர்
மெளனித்தே போயினர்.

இரத்த பூமியில்
மரத்த எம் உணர்வு!
உறவுகளை இழந்து
வலிந்த எம் இதயம்!
உறக்கமின்றி உணவின்று
வலுவிழந்த தேகம்!
வாழ்வு முடிந்ததாய்
சலித்தே நின்றோம்.

இதமான காற்றில்
இரத்த வாடை
செங் குருதியால்
சகதியான கடற்கரை மணல்
மெளனித்து கொண்ட
விடுதலைப் போரின்
வலிசுமந்த வரலாற்றை
காலம் காலமாய்
நிரூபணமாக்கிக்
கொண்டேயிருப்பாள்
முள்ளிவாய்க்கால் அன்னை!

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading