விடுமுறைக்காலம்
இதயம்-61
புதிய வாழ்வு
புத்தாண்டு பிறந்தது
புதியமகிழ்ச்சி உலா
மக்கள் மனதில்
மிக்க மகிழ்ச்சி
பழைய சோகம் களைந்து
புதிய உதயம் தோன்றுகிறதென
ஆரவாரம் அள்ளி வழங்க
சோமவாரம் மெல்ல நகர
தைத்திங்கள் பிறந்தது
தைமகளும் வந்துவிட்டாள்
தரணியெல்லாம் மகிழ்ச்சி
தனம் தானியம் அள்ளி வழங்கிடுவாள்
அல்லலின்றி தொல்லையின்றி
அகமகிழ்வாய் வாழலாம்
அன்பு பெருகிட
ஆசை அருகிட
சுற்றம் சேர குதூகலமாக
சேர்ந்து வாழலாம்
இப்படி எத்தனை எத்தனை
வண்ணக் கனவுகள்
கனவு மெய்ப்படுமா
மெய்ப்பட வேண்டும்
எண்ணங்கள் கனியவேண்டும்
வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும்
இயற்கை உதவ வேண்டும்
உழவரும் சேற்றில் கால்வைக்க வேண்டும்
மக்களும் பசி பட்டினி இன்றி வாழவேண்டும்
புதிய ஆண்டில்்
புதியபாதை தெரியவேண்டும்
தடைகள் எல்லாம் விலக வேண்டும்
புதியவாழ்வு மலர வேண்டும்
மாந்தரும் மனம் மகிழவேண்டும்!
சோகம் களைந்து
தாகம் விடுத்து
புதியவாழ்வு சிறக்க வேண்டும்!
