பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

புனிதா கரன் UK

மழை
———

மேகத்துடன் முட்டிமோதி
மெல்ல நகர்ந்து//
மலையின் மேல்
மதமதப்பாய் வழிந்து//
நீர் நிலைகளில்
சங்கமித்து ஓடுகின்றாய்//
துளித் துளியாய்
சிந்திடும் மழையே//
வரட்சியைப் போக்கிட
வரமாய் வந்தாயே//
இயற்கை செழித்திட
இன்னருள் புரிந்தாயே//
நீ இன்றியே
நித்திலம்தான் மகிழுமா??//
தரணி இன்று
தரமிழந்து போனதே//
மானிடச் செயலோ
மாசுபடுத்திட உலகை//
வெப்பந்தான் அதிகரித்து
வேதனயை கொடுக்குதே//
தவறாமல் நீபொழிந்தால்
மண்ணுயிர்கள் மகிழ்ந்திடுமே//

புனிதா கரன்

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading