06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
மழை
———
மேகத்துடன் முட்டிமோதி
மெல்ல நகர்ந்து//
மலையின் மேல்
மதமதப்பாய் வழிந்து//
நீர் நிலைகளில்
சங்கமித்து ஓடுகின்றாய்//
துளித் துளியாய்
சிந்திடும் மழையே//
வரட்சியைப் போக்கிட
வரமாய் வந்தாயே//
இயற்கை செழித்திட
இன்னருள் புரிந்தாயே//
நீ இன்றியே
நித்திலம்தான் மகிழுமா??//
தரணி இன்று
தரமிழந்து போனதே//
மானிடச் செயலோ
மாசுபடுத்திட உலகை//
வெப்பந்தான் அதிகரித்து
வேதனயை கொடுக்குதே//
தவறாமல் நீபொழிந்தால்
மண்ணுயிர்கள் மகிழ்ந்திடுமே//
புனிதா கரன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.