பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

புனிதா கரன் UK

மழை
———

மேகத்துடன் முட்டிமோதி
மெல்ல நகர்ந்து//
மலையின் மேல்
மதமதப்பாய் வழிந்து//
நீர் நிலைகளில்
சங்கமித்து ஓடுகின்றாய்//
துளித் துளியாய்
சிந்திடும் மழையே//
வரட்சியைப் போக்கிட
வரமாய் வந்தாயே//
இயற்கை செழித்திட
இன்னருள் புரிந்தாயே//
நீ இன்றியே
நித்திலம்தான் மகிழுமா??//
தரணி இன்று
தரமிழந்து போனதே//
மானிடச் செயலோ
மாசுபடுத்திட உலகை//
வெப்பந்தான் அதிகரித்து
வேதனயை கொடுக்குதே//
தவறாமல் நீபொழிந்தால்
மண்ணுயிர்கள் மகிழ்ந்திடுமே//

புனிதா கரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading