மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

புரிதலுக்குள் பூகம்பம்..

வியாழன் கவி 1951

புரிதலுக்குள் பூகம்பம்..

தெளிவான சிந்தனை
அணைக்கட்டும் உந்தனை
சீரிய பணிகளோடு
இணைக்கட்டும் அன்பினை
புரிதல் என்பது கடினம்
என்றுமே விரிசல் காணாது
காத்திடுக நெஞ்சினை..

உடைந்த கண்ணாடி
என்றும் மீள இணையாது
கிழித்துத் தோலைமெல்லவும்
குருதி காணும் எப்பொழுதும்
உறுதி என்பது அன்பில்
இறுதி வரை நிலைக்கும்
புரிதல் தென்றல் போலும்
புரியாமை சூறாவளி போலும்..

வஞ்சகம் காணா இதயம்
எண்ணித் துணியும் யாவும்
அஞ்சிட வேண்டாம் மனிதா
கெஞ்சுதல் முறையும் அல்ல
எஞ்சிடும் காலம் நெடுக
புரிதல் செய்ய முயன்றிடு..
சிவதர்சனி இராகவன்
21/3/2024

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading