பொங்குவாய்

குட்டக் குட்ட குனிந்தே கிடப்பதா
முட்டுக் கொடுத்தே வாழ்க்கை நகர்வதா
எத்தனை காலம் அடிமைச் சேவகம்
பத்தாதோ பட்டது எங்கேயுன் கோபம்

பிறப்பும் இறப்பும் வாழ்வில் ஒருமுறை
பொறுத்துப் பொறுத்து இருப்பது எதுவரை
சிறுமைப்பட்டே ஆயுளுக்கும் கொத்தடிமையாகிக் கிடப்பதா
பொறுமையேயென்று எழுச்சியின் வாசல்களை அடைப்பதா

ஆண்டான் அடிமையென்பதை தலைமுறைக்கும் தொடர்வதா
பூண்டோடு அதையழித்து அத்தனத்தை விடுவதா
பொங்கியெழு வேண்டாமினி கும்பிடும் சீவியம்
மங்கியே மறையட்டும் அடிமையின் காவியம்

ஜெயம்

17-12-2025

Author:

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading