இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம்.
இல.521
*** விடியலின் உன்னதம்***
வெள்ளந்திப் பொழுது வெள்ளாப்பிலே,ஜனனம்.
வெளிச்சத்தை விழுங்கிய, இருளோ , அவலமாக மரணம்.

காலைக் குருவிகளோ, கீச்சு , மாச்சு என்று கல கலத்துச், சத்தம்.
மாலையாவதற்குள்,மறுபடியும் வயிறு நிரப்பவென , ஓட்டம்.

அயர்ந்திட்ட கண்களோ, இமை வெட்ட மறுக்குது.
இறுகப் பிடித்த போர்வையோ, நழுவிப் போகத் தடுக்குது.

அன்றாடும் உழைப்பாளிக்கோ,அடுத்த நேரத்தை எண்ணி எண்ணித்,தலைச்சுற்று.
வண்டாட்டம் ,பறப்பவர்க்கோ ,வறுக வேண்டுமென்று , பெரும் பித்து.

தெண்டாட்டம் களையவே, தினம் , தினம்,தோன்றி மறையும் விடியல்.
வெள்ளாப்பும் , வெகு இருளும், வகுப்பதே , விடியலின் உன்னதம் .

பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading