பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம்.
இல.521
*** விடியலின் உன்னதம்***
வெள்ளந்திப் பொழுது வெள்ளாப்பிலே,ஜனனம்.
வெளிச்சத்தை விழுங்கிய, இருளோ , அவலமாக மரணம்.

காலைக் குருவிகளோ, கீச்சு , மாச்சு என்று கல கலத்துச், சத்தம்.
மாலையாவதற்குள்,மறுபடியும் வயிறு நிரப்பவென , ஓட்டம்.

அயர்ந்திட்ட கண்களோ, இமை வெட்ட மறுக்குது.
இறுகப் பிடித்த போர்வையோ, நழுவிப் போகத் தடுக்குது.

அன்றாடும் உழைப்பாளிக்கோ,அடுத்த நேரத்தை எண்ணி எண்ணித்,தலைச்சுற்று.
வண்டாட்டம் ,பறப்பவர்க்கோ ,வறுக வேண்டுமென்று , பெரும் பித்து.

தெண்டாட்டம் களையவே, தினம் , தினம்,தோன்றி மறையும் விடியல்.
வெள்ளாப்பும் , வெகு இருளும், வகுப்பதே , விடியலின் உன்னதம் .

பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading