பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 213
07/03/2023 செவ்வாய்
“நாதம்”
———-
கோவில் மணி நாதம்-அது
குடிகளுக்கு என்றும் வேதம்!
பூவில் வண்டின் நாதம்-அது
புரியாத இனிமை கோலம்!

அவன் ஆடிடும் நாதம்-அது
ஆனந்த உச்சத்தின் வேதம்!
இவண் இல்லை பேதம்-என்றும்
இணையிலா நாத கானம்!

கானத்தில் பிறந்த நாதம்-அதில்
காலத்தால் வாராது சேதம்!
மோனத்தில் ஆடும் பாதம்-அது
மோதல் இல்லாத ஞானம்!

நாதஸ்வரம் ஓர் ஞானம்-அதில்
நமக்குள் இல்லை பேதம்!
வேத உச்சாடன நாதம்-அது
விண்வரை சென்று மீளும்!

தந்திகள் தரும் நாதம்-அது
தானாக உயிரை மீட்டும்!
அந்தியில் வீசும் காற்று-அது
ஆன்மாவை வருடும் நாதம்!

இருபக்க அடிதாங்கும் மேளம்-அதன்
இணைவில் இசைந்திடும் நாதம்!
தருவிக்கும் இன்பமுதிர் தாளம்-அது
தந்திடும் இணையிலா நாதம்!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading