10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 215
28/03/2023 செவ்வாய்
“நீர்க்குமிழி”
—————
பட்டி நிறை வெள்ளத்திலே
பாவை யென்று வந்தவளே!
எட்டி நின்று பார்க்கையிலே
என் உள்ளம் கவர்ந்தவளே!
குட்டிக் குட்டி குமிழெனவே
குடைபிடித்து வருபளே!
ஒட்டி ஓடும் வெள்ளத்திலே
ஒவ்வொன்றாய் ஒளிர்பவளே!
கண்ணாடி உடல் வாகில்
கட்டழகு கொண்டவளே!
பின்னாடி விரல் பட்டால்
பிடித்தவுயிர் மாய்ப்பவளே!
கைபட்டால் உயிர் மாய்க்கும்
கற்புக்கரசி ஆனவளே!
மெய்பட்டால் துவண்டு விழும்
மேலான குணத்தவளே!
வேறு
———
நீர்க் குமிழே வாழ்வென
நீத்தார் சொல்லிச் செல்ல!
ஊர்க்கிது உபதேச மென
ஊர்க்குருவி ஒன்று சொல்ல!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
26
Jul
ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால்...
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...