தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 215
28/03/2023 செவ்வாய்
“நீர்க்குமிழி”
—————
பட்டி நிறை வெள்ளத்திலே
பாவை யென்று வந்தவளே!
எட்டி நின்று பார்க்கையிலே
என் உள்ளம் கவர்ந்தவளே!

குட்டிக் குட்டி குமிழெனவே
குடைபிடித்து வருபளே!
ஒட்டி ஓடும் வெள்ளத்திலே
ஒவ்வொன்றாய் ஒளிர்பவளே!

கண்ணாடி உடல் வாகில்
கட்டழகு கொண்டவளே!
பின்னாடி விரல் பட்டால்
பிடித்தவுயிர் மாய்ப்பவளே!

கைபட்டால் உயிர் மாய்க்கும்
கற்புக்கரசி ஆனவளே!
மெய்பட்டால் துவண்டு விழும்
மேலான குணத்தவளே!

வேறு
———
நீர்க் குமிழே வாழ்வென
நீத்தார் சொல்லிச் செல்ல!
ஊர்க்கிது உபதேச மென
ஊர்க்குருவி ஒன்று சொல்ல!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading