இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 217
04/04/23 செவ்வாய்
“தவிப்பு”
———-
மனத்தில் நாளும் தவிப்பு!
மண்ணில் என்றும் இருப்பு!
கனத்தில் அதனின் சிறப்பு,
காலம் கொடுத்த அமைப்பு!

தாயுள் கருவின் தவிப்பு,
தரணி காணும் விருப்பு!
ஆயுள் முழுதும் நிலைப்பு!
அவனி தரும் அமைப்பு!

அணைகள் கொண்ட தவிப்பு,
அன்னை அவளின் வளர்ப்பு!
பிணைகள் தாராத தடுப்பு,
பிறழ்வு கொள்ளும் அமைப்பு!

பாலை உண்ணும் விருப்பு,
பண்டம் உடையும் முனைப்பு!
வேளை அறியாத நினைப்பு,
வேதனை தருமோர் தவிப்பு!

கற்றலை நாடும் முனைப்பு,
காலமது தந்திடும் சிறப்பு!
உற்சாக பானத்தின் உவப்பு,
உனக்குத் தாராது மதிப்பு!

விரும்புவது அமையும் தவிப்பு,
விளையாது வேளை விடுத்து!
கரும்பும் முற்றினாலே சுவைப்பு!
காலத்தின் எமக்கான படிப்பு!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading