இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 225
06/06/2023

“ஆறுமோ ஆவல்”
—————————
வாழை நாரைப் பதப்படுத்தி,
வர்ண நூல்கள் உருவாக்கி,
யாழில் நெசவை விரிவாக்கி,
யௌவன மாக்கிடப் பேராவல்!

தாழைத் தும்பை வலுவாக்கி,
தரமாய் நார்கள் உருவாக்கி,
மூளைத் திறனை விரிவாக்கி,
முதலது படைக்க பேராவல்!

தூர்ந்த குளமெலாம் தூர்வாரி,
தூய்மை விவசாயம் கருவாக்கி,
தீர்ந்து போகாமல் திருவாக்கி,
திருவாய்த் திளைத்திட பேராவல்!

உணவுப் பஞ்சம் தனைநீக்கி,
ஊரும் உலகும் ஒன்றாகி,
கனவுப் பொழுதையும் பயனாக்கி,
களத்தில் வென்றிடப் பேராவல்!

அருவும் திருவும் இணையாகி,
அன்பும் சிவமும் ஒன்றாகி,
அனைத்து பேரும் வேறின்றி,
அன்பால் இணையப் பேராவல்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading