பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

மதிமகன்


சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 228
11/07/2023 செவ்வாய்
“பாட்டி”
———-
அதைக் காட்டி இதைக் காட்டி
அம்புலியின் முகம் காட்டி
நிதம் நிதமாய் உணவூட்டி
நித்தி ரைக்குத் தாலாட்டி…..,

தத்துவக் கதை காட்டி
தன் கதைக்கு மெருகூட்டி
மெத்தன முகம் காட்டி
மேனிக்கு இதம் காட்டி…..

ஆட்காட்டி விரல் சுட்டி
அவரவரை இனம் காட்டி
நாட்காட்டி தினம் புரட்டி
நற்றமிழின் சுவை தீட்டி…..

படித்ததை பாடிக் காட்டி
பக்குவமாய் பொருள் கூட்டி
வெடிப்பது போல் கைதட்டி
வேண்டிடும் சுவை கூட்டி….

தோட்டம் துரவு காட்டி
தொழிலின் பெருமை ஊட்டி
பாட்டி மருத்துவம் மீட்டி
பலவும் செய்வாள் என்பாட்டி!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan