பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 236
03/10/2023 செவ்வாய்
குழலோசை
——————
ஒன்பது துளைகள் ஊடாய்,
உலகில் கேட்குதே கானாய்!
உனது இசையோ பூவாய்,
உள்ளம் வருடுமே தானாய்!

விரல்களின் சிறிய அசைவில்,
விழுகுதே தேனாய் காதில்!
சுரங்களின் இனிய இணைவில்,
சுரக்குதே தேனும் பூவில்!

கைகள் தாளம் போடும்!
காற்றில் தலையும் ஆடும்!
சைகை மேலும் இசையும்!
சாய்ந்து தேகம் அசையும்!

குயிலும் அமர்ந்து கேட்கும்!
குழந்தை அழுகை தீர்க்கும்!
வெயிலும் மழையும் அசரும்!
வேய்ங்குழல் எதையும் கவரும்!

மண்ணை அளந்த கண்ணன்-
மன்னன் கையின் சின்னம்
திண்ணை ஓரம் எங்கும்,
தேனாய் ஒலிக்கும் திண்ணம்!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading