மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 236
03/10/2023 செவ்வாய்
குழலோசை
——————
ஒன்பது துளைகள் ஊடாய்,
உலகில் கேட்குதே கானாய்!
உனது இசையோ பூவாய்,
உள்ளம் வருடுமே தானாய்!

விரல்களின் சிறிய அசைவில்,
விழுகுதே தேனாய் காதில்!
சுரங்களின் இனிய இணைவில்,
சுரக்குதே தேனும் பூவில்!

கைகள் தாளம் போடும்!
காற்றில் தலையும் ஆடும்!
சைகை மேலும் இசையும்!
சாய்ந்து தேகம் அசையும்!

குயிலும் அமர்ந்து கேட்கும்!
குழந்தை அழுகை தீர்க்கும்!
வெயிலும் மழையும் அசரும்!
வேய்ங்குழல் எதையும் கவரும்!

மண்ணை அளந்த கண்ணன்-
மன்னன் கையின் சின்னம்
திண்ணை ஓரம் எங்கும்,
தேனாய் ஒலிக்கும் திண்ணம்!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading