மனமென்னும் மேடையிலே

நேவிஸ் பிலிப் கவி இல ( 139) 27/06/24

மரக் கிளையில் வந்தமரும் பறவையென
சிறகடித்துப் பறக்கும் எண்ணப் பறவை
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
வானில் வெட்டி மறைகின்ற
மின்னல் சிதறல்களாய்

வேடிக்கைப் பேச்சுக்கள்
வாடிக்கையாகிட
கோடி இன்பம் கண்டு
வரவின்றி செலவு செய்து

உழைப்பில்லா ஊதியம்
உல்லாச வாழ்க்கை
ஏக்கங்கள் கொண்டதில்லை
தாக்கங்கள் கண்டதில்லை

தினம் தினம் ருசித்த வாழ்க்கை
ஆயிரம் மாற்றங்களால்
தொலைத்தலும் தேடலுமாய்
கழிந்திடும் பொழுதுகள்

வாழ்க்கைப் படகினிலே
காலம் நகர்ந்திட
நினைவுகள் மட்டும்
மனதோடு பேசுது.

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading