தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

மனோகரி ஜெகதீசன்

நிர்மூலம்

சிதைத்தார் எம்மொழியைச்
சிங்களத் திணிப்பால்
வதைத்தார் அழித்தார்
அக்கினிப் பொறியால்
உதைத்தார் தகர்த்தார்
ஊனமாக்கினர் நினைவிடங்களை

தள்ளி அகற்றித்
தமதாக்கினர் நிலங்களை
எள்ளித் தடுத்தனர்
நினைவேந்தல் நிகழ்வுகளை

நிர்மூலத்தின் உச்சமே
நினைவிடங்களின் தகர்ப்பு
நிகழ்த்திய நீசர்
காணவேண்டும் அச்சம்

வடுவல்ல நினைவிடம்
வீரத்தின் சுவடே நினைவிடம்
ஆர்த்தெழும் வீர உணர்வுகளின் உறைவிடம்

வீழ்த்தியவன் கபடத்தையும்
காட்டும் அடையாளம்
வீசியுடைததுவோ அதனால்தான் விலங்குப்பட்டாளம்

அடுத்தவர் வாழ்வில்
அவலத்தைக் கொட்ட
கொடுத்தவர் யாரோ
இவருக்குத் தூண்டல்

உரியன காணாது
உதிராது எம்முயிர்
ஊனத்துடன் வெந்து
உருக்காது எம்முடல்

காலமும் உணர்வும் களமும் கைகோர்க்கக்
கடையாருக்குக் கொடுப்போம் நாமும் பதிலடி
அப்போது காண்பார் இவரும் தீராத் தலையிடி

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading