16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
மனோகரி ஜெகதீசன்
நிர்மூலம்
சிதைத்தார் எம்மொழியைச்
சிங்களத் திணிப்பால்
வதைத்தார் அழித்தார்
அக்கினிப் பொறியால்
உதைத்தார் தகர்த்தார்
ஊனமாக்கினர் நினைவிடங்களை
தள்ளி அகற்றித்
தமதாக்கினர் நிலங்களை
எள்ளித் தடுத்தனர்
நினைவேந்தல் நிகழ்வுகளை
நிர்மூலத்தின் உச்சமே
நினைவிடங்களின் தகர்ப்பு
நிகழ்த்திய நீசர்
காணவேண்டும் அச்சம்
வடுவல்ல நினைவிடம்
வீரத்தின் சுவடே நினைவிடம்
ஆர்த்தெழும் வீர உணர்வுகளின் உறைவிடம்
வீழ்த்தியவன் கபடத்தையும்
காட்டும் அடையாளம்
வீசியுடைததுவோ அதனால்தான் விலங்குப்பட்டாளம்
அடுத்தவர் வாழ்வில்
அவலத்தைக் கொட்ட
கொடுத்தவர் யாரோ
இவருக்குத் தூண்டல்
உரியன காணாது
உதிராது எம்முயிர்
ஊனத்துடன் வெந்து
உருக்காது எம்முடல்
காலமும் உணர்வும் களமும் கைகோர்க்கக்
கடையாருக்குக் கொடுப்போம் நாமும் பதிலடி
அப்போது காண்பார் இவரும் தீராத் தலையிடி
மனோகரி ஜெகதீஸ்வரன்.

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...