அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

பசுமை

உறைகழன்று வித்து முளைக்க
உருவெடுக்கும் பசுமை உலகில்
தரையிலிடு பசளை உண்டு
பயிருயரப் படரும் பசுமை
தரைநிறைத்துப் பயிரும் செழிக்க
தனைநிறுத்திச் சிலிர்க்கும் பசுமை
குறைகழற்றி உயிர்கள் வாழக்
குவிந்தாட வேண்டும் பசுமை

நீர்நிலைகள் நீரை இறைக்க
நின்றாடும் பசுமை உலகில்
கார்மழையும் பெய்து நிறைக்க
கனதிகாட்டும் பசுமை நனைந்து
பார்ப்பரப்புத் தொட்ட கதிரால்
பழுப்பேறக் குன்றும் பசுமை
வேர்விடலில் தொடங்கும் பசுமை
வெந்தழிதல் முறையோ சொல்லு

தலைவிரித்து ஆடும் மரங்கள்
தந்துதானே செல்லும் விதைகள்
குலைகொடுக்கும் வாழை என்றும்
குட்டியீன்று தானே வீழும்
தலைமுறையைக் காக்கப் பயிர்கள்
தருமிவற்றை நுணுகிப் பாரும்
தலைமுறைக்காய் பசுமைக் காப்பு
தந்திடலே அவரின் நோக்கு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading