பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத் தலைப்பு

கடல் மைந்தன்

அலையடித்து இங்கும் அங்கும் ஆட்ட
வலையிழுத்து வாழ்வதிலே வலைஞன் நாட்டம்
மலைத்திடத் தருவான் மாமிச ஊட்டம்
சிலைவைத்து ஏத்தினோமா
சிக்கவைத்து தருமிவனுக்கு
அலையிழுத்து அகாலத்தில் அடங்கையில்
அஞ்சலித்தோமா
அழுதுபுரண்டு

கலத்திலே மிதக்கையில்
தொடரும் கருமைப் பொழுது
விலத்தியே வாழ்கின்ற விரும்பாத் துறவு
நிலத்திலே இவனுக்கு மட்டுமேன் நியதி தப்பிய நிகழ்வு
புலத்திலே பெருவளத்தைக் குவிப்பானுக்கு பற்றாக்குறைப் படர்வு

தப்பாது மீன்வகை தந்திட
உப்பைத் தின்று உவர்ப்பிலே ஊறிடுமிவன்
கூப்பாடு போட்டினும்
கேட்காது
நலனும் பூக்காது
ஆள் காட்டி குருவிதான்
அடையாளம் காட்டுமோ?
பிடித்த இடத்தில் புகுவதோ
கடல்மைந்தன்
விருப்பு
அதனால்தானோ
சடங்குக்கடங்காது சங்கமமாகிறான்
கடலோடு

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading