இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

திருநங்கை

பிறந்தாள் ஆணாய் ஆனால்
பிறழ்வால் உணர்ந்தாள் பெண்ணாய்
மறந்தும் இனிமேல் வாழாள்
மண்ணில் ஆணாய் மகிழ்வாய்

அறுத்தாள் அதற்காய் உறுப்பை
அவதிகள் பலவும் தாங்கி

திருநங்கை இவலென் தங்கை
திருச்சூடி மிளிரும் நங்கை
கருவழியே தானே வந்தாள்
கசப்பதுமேன் இவளும் சொல்வீர்

துணிந்தே வகுத்தாள் பாதை
தூர்ந்தே அழிய உபாதை
அணிந்து கொண்டாள் படிப்பை
ஆக்கி வென்றால் பலதை

ஆனாலும் குனிந்தே நிற்கின்றாள்
ஆதார மற்ற பயிராய்
பேணாது விட்டாலும் தப்பில்லை
பொசுக்காது விடுவீர் அவளை

இருட்டில் எந்நாளும் வாழ
ஏவாதீர் தீதைச் செயலால்
குருட்டு எண்ணம் கொண்டு
கொட்டாதீர் தீயைச் சொல்லால்
உருட்டு மதுவும் பின்னால்
உதிராப் பழியாகி நின்று
சுருட்டும் வாலைச் சொன்னபடி
சுதந்திரியாய் வாழட்டும்
அவளும் நல்லபடி

மனோகரி ஜெகதீஸ்வரன்.

பதியவில்லை

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading