பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

வாக்கு

ஜனநாயக வித்தே வாக்கு
இனவாதத்தால் விழ்ந்தது அதனின் போக்கு

வெறும் அரசு மாற்றமே இங்கு இலக்கு
அறுந்து தொங்குது
அந்தரந்தில் சமாதானம்

புரிந்து கொள்ளாப் பருந்துகளாயே
மூவின அரசியல் வாதிகள்
அரித்துக் கொல்லும் அவலத்தை
ஆணவரின் அடங்காச் சேட்டையை
சிரித்துக் கடந்திட முடியுமோ
சிந்தி மனிதா
சிதையேறு முன்னே

தொந்தி பெருத்தவர்
தோழமை கூட்டி
சந்து பொந்து
சடாரென நுழைந்து
கொள்ளையிட்ட பணத்தைத் தூவி
மலட்டுக் கொள்கைகள் கூவி
கொடுப்பதாய்ச் சொல்வர் ஆவி
கொடூரர் இவரோ பாவி
வென்றிட விட்டாலோ
வெல்லாது நீதி
தடுப்பதே தார்மீக நெறி
தந்திரமே அதற்கான பொறி

சொல்லாமலே போட்டுவிடு
வம்பருக்கு
செல்லாவாக்கு
நில்லாமலே போகட்டும்
நீசரின் செல்வாக்கு

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan