முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

சந்தம் சிந்திம் சந்திப்பு 216.
“ நீர்க்குமிழி”. காலமது வருமுன்னே
காலனும் வருவான்
தூரமது துடிக்க
சுருக்கை இடுவான்

செல்வேன் என்றே
செல்வமும் செல்லும்
நல்லோர் செயலை
நிறுத்தியும் செல்லும்
அல்லல் உள்ளேறி
ஆக்கினை செய்யும்
பல்விழுத்திப் பருவமும்
பழிப்புக் காட்டும்
கல்லாகி மனமும்
கருணையைச் சுருக்கும்
வெல்வார் எவருண்டு
நிலையாமை கழற்றி

நீர்க்குமிழின் தோற்றமும்
நிமிடக் கரைவும்
பார்த்திடச் சேர்த்திடுமே நிலையாமைக் கருவை
திருமதி மனோகரி. ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading