” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

தீப ஒளியே

விழி விரும்பும் தோழி நீயே
விலகா வீரிய உறவும் நீயே
விருந்து இடுவதும் உந்தன் ஒளிக்கதிரே

கண்ணைப் பறிக்காத் தீப ஒளியே நீ

அழியும் உன்னால் அண்டும் இருள்
அதன்பின் கண்ணுக்குத் தெரியும் பொருள்
குழிமேடும் காணும்
உன்னால் ஒளி
கூட்டி வருவாய் கூட்டத்தை அதன்வழி
காட்டித் தருமதுவும் கயவர் வெறி
வழிந்து ஓடும் நீருமெம் விழிவழி

மங்களம் அமங்கலம் இரண்டுமுன் தளம்
குங்குமப் பெண்களுக்கு
நீயோர் கும்பிடுகலம்

அந்திசந்தி ஆலயமெங்கும் சிந்துமொளி உன்ணொளியே
ஆண்டவனைக் காட்டுவதும் உன்ணொளியே

பண்டிகைக் காலமும் மிளிரும் உன்னால்
பின்னிக் கதைகளும்
சுழலும் பின்னால்

ஆபத்து இல்லாமலே ஒளிதந்து

தீப ஒளியே திசையெங்கும் சிந்து
துயரக் கீற்றிணையும் வீசுவாய்
அயர்வகல சுகவருடலையும் பூசுவாய்
பயமகற்றவும் பரவி நிற்பாய்
பழிசுமக்கவும் தொற்றிப் பரவுவாய்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan