10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
மனோகரி ஜெகதீஸ்வரன்
தலைப்பூ
மங்களத்தின் அடையாளமே
மங்கையின் தலைப்பூ
பொங்கிடு மகிழ்வோ
அதனது விதைப்பு
தங்கிடு தாலிக்கும்
அதுதரும் வனப்பு
வண்ண வாசனைப் பூக்கள் தருமே
பெண்ணின் கூந்தலில் அமர்ந்திருந்து அழைப்பு
அதுகாணில் ஓடும்
அண்டிய களைப்பு
ஒற்றையாயும் கூந்தலில் தொற்றிக்
காட்டும் ஒய்யாரம்
பற்றைக் காடாயும் பரவி
நிறையும் காதோரம்
தொட்டிலாயும் ஆடும்
தொடு சரத்தால்
தொட்டுச் சூட்டிடவும் வைக்கும்
அன்பர் கரத்தால்
குமரிக்கும் எழில்கூட்டும்
வண்ணம் தூவி
வண்டிணையும் அழைக்கும்
வாசனை காவி
அமங்கலி தலைப்பூவைப்
பறிப்பர் தாவி
அதுகண்டு வதைபடும்
பார்ப்பவர் ஆவி
இதிலென்ன உண்டு நீதி
இதயத்தைத் தொலைத்து விட்டதே மானிட ஜாதி
கிழவிக்கும் கிட்டும்
வருமானம்
விற்பனை கூடி
அழவைக்கும் தலைப்பூவும் அடுத்தநாள் வாடி
அதன்பின்னே அதுவும் வீழும்
மண்ணை நாடி
மனோகரி ஜெகதீஸ்வரன்

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...