புனித ரமலானே வ௫க
-
By
- 0 comments
அகத்தினில் இன்பமே
-
By
- 0 comments
மனோகரி ஜெகதீஸ்வரன்
பெண்ணே
பெண்ணே நீயொரு வரம்
என்னே உலகுசெய்த தவம்
சிவனும் தந்தான் பாதி
கணித்தே செய்தான் நீதி
பெண்ணே உந்தன்
பெண்மையே பேரழகு
மண்ணுக்குக் காட்டினான்
பாரதியும் நேரழகு
தாய்மை நீதாங்கின் தனியழகு
தவசி வாழ்வே உனதுறவு
செலவைக் சுருக்கி
வரவைக் கூட்டிச்
செய்வாய் சேவகம்
குலத்தைக் காக்க
குடும்பம் செழிக்க
எய்வாய் சுகத்தை
வெற்றியின் முன்னும்
பின்னும் மூச்சென
நிற்பவள் நீயே
சுற்றி நின்றுனைப்
பற்றி அணைத்துக்
காப்பவர் சிலரே
இச்சைக் கருவி
என்றெண்ணிச் செய்வர்
பாதகம்
கொச்சைக் குண்டுகளாலும் துளைப்பர் பாதகர்
இடிதாங்கி ரணமேந்தி
வடுவாங்கி வதைபடும்
பெண்ணே
நிலத்தில் உனக்கு உண்டோ நிம்மதி
அயரா உழைப்புக்கும் உண்டோ பெறுமதி
ஆக்கினை கண்டே கேட்கின்றேன் பெண்ணே
சாக்குப் போக்கைத் தூக்கிப் போட்டுப் போராடு
சங்கடங்கள் தொலையும்
வேரோடு
நீயும் வாழ்வாய் உணர்வோடு
உலகும் வாழும் உயிரோடு
மனோகரி ஜெகதீஸ்வரன்.
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments