மனோகரி ஜெகதீஸ்வரன்

அழியாத கோலம்

தனித்தியங்கும் வன்மை-பிறமொழிகளுக்கும்
தாயாகும் தன்மை
கொண்டதோ தொன்மை
கண்டதோ கடைந்துயரச் சங்கம்
பூண்டதோ இலக்கண இலக்கிய அணிகலங்கள்
வெல்வதோ பிறமொழித் தாக்கமின்மை

செல்வதோ நடுநிலமைவழி
சேர்ப்பதோ உயர்விழுமியநெறி
பேணுவதோ இலக்கியமொழிக் கோட்பாடு

காணுவிதம் காட்டினாள் தமிழன்னை
பூட்டினர் அறிஞர் செம்மொழி மகுடம்தனை

வாழ்வுக்கே இலக்கணம் அமைத்த மொழி
வாழ்வாங்கு வாழ்வதற்கே வாழும் ஜீவநதி

இலக்கண இலக்கியச் செழுமை
இயலிசை நாடக முறைமை
இங்கிருக்கும் ஏனைய
மொழிகளுகில்லை அந்நிலமை

அகம்புறம் அறம் -அதை
அள்ளித் தரும் விதம்
நிதம் கற்கத் தூண்டும்
இதபதம் சுகம் அண்டும்

ஒரெழுத்துக்கு ஒரொலி
ஒவ்வாமை கழற்றும் இலகுவழி
சீரியக்கத்துக்காய் உயிர்மெய்க் கூட்டெழுத்து
இருநூற்றி நாற்பத்தியேழு

கற்பது எளிது
காண்பதோ நுண்மை
கண்டோம் தமிழதன் உண்மை

தமிழே சொற்களின் சுரங்கம்
சொற்போர் அரங்கம்

சிரஞ்சிவியாய் வாழும் தமிழ்மொழி
அறஞ்சீவுவார்க்கு அனலெறி மொழி
கரங்கூப்புவார்க்குக் கன்னல் மொழி

அலங்கோலமல்லத் தமிழ்
அங்ககீனமுடையதல்லத் தமிழ்
அலங்காரமே தமிழ்
அழியாதகோலம் கொண்டதே தமிழ்
அடிக்கடி நீயுமதை உமிழ்
அடுத்தவன் மொழி
ஆர்ப்பரிப்பைக் கவிழ்

மனோகரி. ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading