மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

மரணித்தவனே மறுபடி வந்தால்

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025

மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி முளைத்ததைக் கண்டாயா?

மரணித்தவனே அண்ணா..
மறுபடியும் வருவாயானால்
மனதில் கிடப்பவையை
மணிக்கணக்காய் பேசலாம்

நினைவுகளின் சுமை இறக்கி
நிகழ்காலக் கதை பேசி
விழிகளில் தேங்கிய நீரையும்
வீணான காலத்தையும் மறந்து

மாமன் சாயலென ஊரார் சொல்ல
மகனின் முகம் பார்க்க
மறுபடியும் பிறப்பெடுப்பாய்
மலைத்துத் தான் நீயும் நிற்பாய்!

மரணித்தவனே மறுபடியும் வந்தால்
மௌனத்தில் நிலைப்பனோ
மழையாய்க் கண்ணீர் கொட்டிடுமோ
மண்டியிட்டுக் கிடப்பனோ?…

Jeba Sri
Author: Jeba Sri

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading