மாதவமே உந்தனை

சுமித்ரா தேவி

கவிதையின் தலைப்பு
மாதவமே உந்தனை
பகலவனுக்கு இணையாக
பாரினில் இருந்து சென்றீரோ
கார்முகில் களைத்தெழுந்து
கதீர்வீச காற்றோடுசென்றீரோ
மண்மிசைநாம் வாழ
மரணத்தை சுமந்தீரோ
தமிழ் இனிக்க நீங்களும் எம்மை
தவிக்கவிட்டு சென்றீரோ
மண்ணை விட்டு சென்றாலும் எம்
மனதை விட்டுசெல்லாத வீரர்களே
நெஞ்சை நிமிர்த்திபோர் புரிந்த உங்கள்
நெஞ்சம் தான் மறக்குமோ….
மோ.சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan