மாறியதே வாழ்க்கை

கவிதை 810 பகுதி 1

விடியும் முன்பே விழித்துக்கொண்டு
விரைந்து ஓடும் மானுட வாழ்வு
நேரம் போட்டு கடிகாரதின் கட்டளை
அதற்கு அடங்கி கால்கள் நடைபோடும்

அலாரம் கத்தி காலையில் எழுப்பும்
கண்ட கனவும் இடையிலே நிற்கும்
பணம் தேடி ஓடும் கால்கள்
இதுவென வாழ்க்கை கரைந்திடும் நாட்கள்

இன்பம் மறந்து உழைப்பே கதியாக
அன்பின் மொழிகளும் சுருக்க செய்தியாக
செயற்கையாக இன்று சிரிப்பும் மாறியதே
அருகிருக்கும் உயிரான உறவுகளும் அந்நியமாகியதே

ஜெயம்
15-07-2026

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading