மாவீரச் செல்வங்களே 77

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-11-2025

மண்ணிற்காய் மரணித்த
மாவீரச் செல்வங்களே!
கார்த்திகை பிறந்தாலே
கனக்குது மனங்களும்

வலியின் வடுக்களும்
வேதனையாய் புரளுதே
கடைசி நிமிடத்தில்
களம் ஆடுகையில்

மனதில் தோன்றியதேதுனக்கு
மண்ணா? மனையாளா?
பெற்றவரா? பேரர்களா?
கூடவே பிறந்தவரா கூடித் திரிந்தவரா?

குமுறி அழுதாயா?
சொல்ல ஏதும் நினைத்தாயா?
சொல் இழந்து தவித்தாயா?
யாது துணிவு உனக்கு?

செந்தமிழ் ஈழத்திலே
செங்களமாடிய மாவீரச் செல்வங்களே
கனவுகள் பலிக்கட்டும்
காலம் கடந்தாலும் ஜெயிக்கட்டும்

செங்காந்தாள் மலரெடுத்து
தொழுது நாமும் மண்டியிடுவோம்.

Jeba Sri
Author: Jeba Sri

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading