தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

முள்ளிவாய்க்காலில் நடந்தது

கெங்கா ஸ்ரான்லி

முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன
முடக்கிய செய்திகள் சொல்வது என்ன
மக்களின் நிலைமை அறிந்தவர் எவரோ
உதவிகள் செய்ய முனைந்தவர் யாரோ
அவலக்குரல்கள அழுதிடும் சத்தம்
அண்டமே பிளக்கும்
கவலைகள் சூழ்ந்த களம்அங்குதானே
கண்டவர் யாரோ கூறிடுவாரோ
பெரியவர் குழந்தை பெண்கள் ஆண்கள்
போற்றிய மண்ணில் குவிந்தன உடல்கள்்
பீரங்கி வெடிக்க பிணங்களாய் மக்கள்
பீதியில் நடுங்கி பிரிந்தது உயிரே
எங்கும் சொல்ல கொடுமையின் கதையை
என்ன தான் செய்ய முடிந்த எம்கதையை
முடியாது மறக்க என்றென்றும் எம்மனதில்
வடுவான காயம் முள்ளிவாய்க்காலில் நடந்தவை!

Nada Mohan
Author: Nada Mohan

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading