முள்ளிவாய்க்காலில் நடந்தது

கெங்கா ஸ்ரான்லி

முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன
முடக்கிய செய்திகள் சொல்வது என்ன
மக்களின் நிலைமை அறிந்தவர் எவரோ
உதவிகள் செய்ய முனைந்தவர் யாரோ
அவலக்குரல்கள அழுதிடும் சத்தம்
அண்டமே பிளக்கும்
கவலைகள் சூழ்ந்த களம்அங்குதானே
கண்டவர் யாரோ கூறிடுவாரோ
பெரியவர் குழந்தை பெண்கள் ஆண்கள்
போற்றிய மண்ணில் குவிந்தன உடல்கள்்
பீரங்கி வெடிக்க பிணங்களாய் மக்கள்
பீதியில் நடுங்கி பிரிந்தது உயிரே
எங்கும் சொல்ல கொடுமையின் கதையை
என்ன தான் செய்ய முடிந்த எம்கதையை
முடியாது மறக்க என்றென்றும் எம்மனதில்
வடுவான காயம் முள்ளிவாய்க்காலில் நடந்தவை!

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading