மூப்பு வந்தாலே -02.10.2025 ஜெயா.நடேசன்

அகிலமதில் அறிவுச் சிகரங்களாக
வாழ வைத்த எமது தெய்வங்கள்
அன்புக்காக ஏங்கி அரவணைத்தவர்கள்
நிகரில்லாத அன்பை தருபவர்கள்
வயதிலும் அறிவிலும் அனுபமானவர்கள்
முதிர்ச்சி பெற்ற ஆலோசகர்கள்
மூப்பு வந்தவுடன் முடங்கியவர்கள்
கால் தடுமாற கூனிக் குறுகியதில்
கைத் தடியுடன் தட்டுத் தடுமாறியதில்
பல்லுப் போக சொல்லுப் போகும் நிலையில்
நரை முடி பொன் முடியான கோலமதில்
என்றும் தெய்வத்தின் பாதச் சுவடுகளாக
உடல் முதுமையானாலும் உள்ளம் இளமையே

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading