மூப்பு வந்தாலே.

23/ மூப்பு வந்தாலே. விண்ணவன் – குமுழமுனை..
*~***~*
முந்திம் வாழ்ந்த
வாழ்க்கையோ
அது எங்கே?

அறியா வயதில்
ஒன்றாய் ஓடி,ஆடி
எவ்வித கவலையும்,
பொறுப்பும் இன்றியே

முகத்தினிலே புன்
சிரிப்புடனே வாழ்ந்தோமே

ஆனால் இன்றோ
எத்தனை யோசனைகள் மனதிலே

எத்தனை பொறுப்புக்கள் தலையிலே
தலை நிமிரவோ முடியாத அளவிற்கு!!
கண்முன் வந்து போகும் அவ்
கடந்த கால நினைவுகளோ
நெஞ்சில் மணம் வீசுகின்றனவே

மூப்பு வந்தாலே
முகத்தினிலே சிரிப்பு
மறந்து விடுகிறதே…
*~***~*
விண்ணவன் – குமுழமுனை

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading